/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாலிச் செயின் திருட்டு போலீசில் மூதாட்டி புகார்
/
தாலிச் செயின் திருட்டு போலீசில் மூதாட்டி புகார்
ADDED : நவ 21, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: இறந்த மகளின் போட்டோவில் இருந்த தாலிச் செயின் திருடு போனதாக போலீசில், மூதாட்டி புகார் கொடுத்துள்ளார்.
விழுப்புரம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி பழனியம்மாள், 60; இவர், தனது வீட்டில் இறந்த மகளின் போட்டோவில் மூன்றரை சவரன் தாலிச் செயினை மாட்டிருந்தார். அந்த செயினை கடந்த மாதம் 11ம் தேதி காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

