/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் பயிற்சிக்கு பயன்படுத்தும் மின்னணு இயந்திரங்கள் தயார்
/
தேர்தல் பயிற்சிக்கு பயன்படுத்தும் மின்னணு இயந்திரங்கள் தயார்
தேர்தல் பயிற்சிக்கு பயன்படுத்தும் மின்னணு இயந்திரங்கள் தயார்
தேர்தல் பயிற்சிக்கு பயன்படுத்தும் மின்னணு இயந்திரங்கள் தயார்
ADDED : ஜன 10, 2026 07:04 AM

விழுப்புரம்: தேர்தலின்போது ஓட்டு பயிற்சிக்கு பயன்படுத்தும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் துறை சார்பில், வரும் சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, தேர்தல் நேரத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் பொது மக்களுக்கு பயிற்சியளிப்பதற்காக (டெமோ-இ.வி.எம்.,) மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், ஓட்டு பயிற்சிக்கு பயன்படுத்தவதற்காக 110 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரம் பெருந்திட்ட வளாக தேர்தல் ஆணைய கிடங்கிலிருந்து, தேர்தல் பிரிவு அலுவலர்கள் மூலம் கொண்டுவரப்பட்டு, கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலகத்தில் இறக்கி வைத்து, பாதுகாப்பாக மூடி சீல் வைக்கப்பட்டது.

