sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பாணாம்பட்டு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

/

பாணாம்பட்டு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

பாணாம்பட்டு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

பாணாம்பட்டு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி


ADDED : ஜூன் 19, 2025 05:05 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: ழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, பாணாம்பட்டு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடில், பாணாம்பட்டு சாலை சந்திப்பிலிருந்து செல்லும் மெயின்ரோடு மிகவும் குறுகிய அளவில் உள்ளதால், அங்கு தினசரி போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. பாணாம்பட்டு மெயின்ரோட்டில் 500 மீட்டர் துாரத்திற்கு சாலை ஆக்கிரமிப்பு உள்ளதால், காலை, மாலை பள்ளி, கல்லுாரி விடும் நேரங்களில் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது.

இந்த நெரிசலை தவிர்ப்பதற்காக, நகராட்சி சார்பில், தற்காலிக நடவடிக்கையாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. நேற்று காலை பாணாம்பட்டு சாலையில், எம்.ஜி.ஆர்., சிலை முகப்பிலிருந்து, 100 மீட்டர் தொலைவிற்கு இருந்த ஆக்கிரமிப்பு கொட்டகைகள், பேனர்கள் இடித்து அகற்றப்பட்டது.

ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சாலையை அகலப்படுத்தும் பணியை நகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸ் மேற்கொண்டனர். தொடர்ந்து அங்கு சாலை விரிவாக்கம் செய்து, சாலை புதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us