ADDED : மார் 14, 2026 04:38 AM
அ நிறம் | அளவு
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த குந்தலம்பட்டு கிராமத்தில் நிலங்களுக்கு இடையே பரையம்பட்டுக்கு செல்லும் வழியில் உள்ள தரிசு நிலத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். பொதுமக்களின் கோரிக்கையின் பேரில், மேல்மலையனுார் மண்டல துணை தாசில்தார் ரவி தலைமையில் நேற்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
அவலுார்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். வருவாய் ஆய்வாளர் சசிகலா, வி.ஏ.ஓ., காளிதாஸ், சர்வேயர் ராம்குமார், வருவாய் துறையினர் உடனிருந்தனர்.
