/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா
/
ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா
ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா
ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2026 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அனைத்து வழக்கறி ஞர்கள் சங்க தலைவர்கள் சகாதேவன், ராஜகுரு, பன்னீர்செல்வம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி, சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பொங்கல் வைத்து வழிபட்டு படையலிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கறிஞர்கள் பங்கேற்ற உறியடி போட்டி நடந்தது.
விழாவில், நீதிபதி ராஜசிம்மவர்மன், அரசு வழக்கறிஞர் சுப்ரமணியன் உட்பட நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

