
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாலைஅகரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கூட்டுறவு துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
விழாவில், சாலை அகரம் கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், துறை அலுவலர்கள் சமத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனர். நிகழ்ச்சியில், சிலம்பாட்டம், உறியடித்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி பரிசு வழங்கினார்.
விழாவில், துணை பதிவாளர் சரண்யா, சரக துணை பதிவாளர்கள் ராகினி (விழுப்புரம்), ஜீவிதா (திண்டிவனம்), மாவட்ட மத்திய வங்கி முதன்மை வருவாய் அலுவலர் வெங்கட்பிரபு, மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண் இயக்குநர் மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

