/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு
/
கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு
ADDED : செப் 25, 2024 03:40 AM
விழுப்புரம் வளவனுார் அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வளவனுார் அடுத்த கலிஞ்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஜெயக்குமார், 32; அதே பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் அப்பு என்கிற பிரவீன்குமார், 30; இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 22ம் தேதி இரவு இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதில், ஜெயக்குமார், 32; அவரது நண்பர்களான துளசிங்கம் மகன் துரைராஜ், 30; கிருஷ்ணமூர்த்தி மகன் யுவராஜ், 35; ஆகியோர் காயமடைந்தனர்.
இது குறித்து ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், பிரவீன்குமார், அருள்பிரகாசம், கிஷோர்குமார், அருள் ஆகிய 4 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.