/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடும்பத் தகராறு; 4 பேர் மீது வழக்கு
/
குடும்பத் தகராறு; 4 பேர் மீது வழக்கு
ADDED : செப் 09, 2025 11:48 PM
விழுப்புரம்; குடும்பத் தகராறில் இருதரப்பைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் வி.மருதுாரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி செல்வி, 45; இவர், தனது மகன் சக்திசரவணனுக்கு, 25; ஆடம்பரமாக திருமணம் செய்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த, செல்வியின் மருமகன் திவாகர், 28; தனது மனைவி ஸ்ரீதேவியிடம், தகராறு செய்துள்ளார்.
இதை தட்டிக்கேட்ட மாமியார் செல்வியை, திவாகர் திட்டி தாக்கினார். இதனையறிந்த சக்திசரவணன் மற்றும் மூவேந்தன், 27; காளிமுத்து, 55; ஆகியோர் சேர்ந்து திவாகரை தாக்கினர்.
இருதரப்பு புகாரின் பேரில், திவாகர், சக்திசரவணன் உட்பட 4 பேர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.