sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடும்ப தகராறு பெண் தற்கொலை

/

குடும்ப தகராறு பெண் தற்கொலை

குடும்ப தகராறு பெண் தற்கொலை

குடும்ப தகராறு பெண் தற்கொலை


ADDED : ஜூலை 07, 2025 02:14 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஒரத்துார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல், 28; ஓட்டல் மாஸ்டர். இவர், சிந்தாமணியை சேர்ந்த மோனிஷா, 25; என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு அஜித்ரா என்கிற மூன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.

முத்துவேலுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் முத்துவேல் வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது வழக்கம் போல, குடித்து விட்டு வந்தார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மோனிஷா, வீட்டில் துாக்கில் தொங்கினார்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசில் மோனிஷாவின்தாய் தேவி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us