ADDED : டிச 13, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: மரக்காணம் அருகே உள்ள ஓங்கூர் ஆற்று வெள்ளத்தில் சிக்கி விவசாயி இறந்தார்.
மரக்காணம் அடுத்த கானிமேட்டைச் சேர்ந்தவர் பாலமுருகன், 45; விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை ஓங்கூர் ஆறு அருகே உள்ள நிலத்தில் நெல் நாற்றை பார்வையிடச் சென்றார்.
அப்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலமுருகன் சிக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டவர், நேற்று காலை அதே பகுதியில் அவரது உடல் ஒதுங்கியது.
மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.