ADDED : ஜூலை 09, 2025 12:47 AM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே வேன் மோதி விவசாயி உயிரிழந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் தர்மதுரை,24; விவசாயி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் சிவசங்கர் என்பவரும் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு
பைக்கில் கடலுார் - சித்துார் சாலையில் சென்றனர். அப்போது திருவெண்ணெய்நல்லுார், பெண்ணை வலம் அருகே சென்ற போது எதிரே வந்த வேன், பைக் மீது அதி வேகமாக மோதியது.
இந்த விபத்தில் தர்மதுரை மற்றும் சிவசங்கர் இருவரும் படுகாயமடைந்தனர். உடன் அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தர்மதுரை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சிவசங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.