sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 சர்வேயரை கண்டித்து விவசாயி ஆர்ப்பாட்டம்

/

 சர்வேயரை கண்டித்து விவசாயி ஆர்ப்பாட்டம்

 சர்வேயரை கண்டித்து விவசாயி ஆர்ப்பாட்டம்

 சர்வேயரை கண்டித்து விவசாயி ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 27, 2025 06:06 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தாலுகா அலுவலகம் எதிரே, கண்டித்து விவசாயி நாற்றுகளைக் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

மேல்மலையனுார் அடுத்த தாழங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 34; விவசாயி. இவரது நிலத்தை அளவீடு செய்வதற்காக ஐகோர்ட்டில் ஒரு மாதத்திற்கு முன் உத்தரவு பெற்றார்.

தொடர்ந்து மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் சர்வேயரிடம் நிலம் அளவீடு செய்யக்கோரி பல முறை மனு அளித்துள்ளார். ஆனால், சர்வேயர் நிலம் அளப்பது குறித்து முறையாக பதில் அளிக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த விவசாயி, நேற்று மதியம் தாலுகா அலுவலகம் எதிரே தனது ஆதரவாளர்களுடன் சென்று, நாற்றுகளைக் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

வருவாய்த் துறை அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை (இன்று) நிலம் அளவீடு செய்யப்படும் என தெரிவித்த பின் விவசாயி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us