sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மழையால் வேர்கடலை பயிர்கள் பாதிப்பு மகசூல் குறையும் என விவசாயிகள் கவலை

/

மழையால் வேர்கடலை பயிர்கள் பாதிப்பு மகசூல் குறையும் என விவசாயிகள் கவலை

மழையால் வேர்கடலை பயிர்கள் பாதிப்பு மகசூல் குறையும் என விவசாயிகள் கவலை

மழையால் வேர்கடலை பயிர்கள் பாதிப்பு மகசூல் குறையும் என விவசாயிகள் கவலை


ADDED : அக் 08, 2025 11:10 PM

Google News

ADDED : அக் 08, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி பகுதியில் சாகுபடி செய்துள்ள மாணாவரி வேர்கடலை பயிர்கள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செஞ்சி மற்றும் மேல்மலையனுார் தாலுகாவில், 5 ஆயிரம் ஏக்கர் அளவில் மாணாவாரி வேர்கடலை சாகுபடி செய்கின்றனர். பொதுவாக, 105 நாள் பயிரான மாணாவாரி வேர்கடலை பயிருக்கு மிதமான மழை போதுமானது.

தற்போது செஞ்சி, மேல்மலையனுார் பகுதியில் சாகுபடி செய்துள்ள வேர்கடலை பயிர்களில் பூக்கள் விட்டு, காய் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. இந்த நேரத்தில் இரவில் தொடர்ந்து கனமழை பொழிந்து நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், வேர்கடலை பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவிடும்.

மேலும், பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் அதிகரிக்கும். காய் பிடிக்கும் பருவம் என்பதால் வேர்களில் தண்ணீர் சேர்ந்து காய் பிடிப்பது குறைவதுடன், சக்கையாக வலுவிழந்தும் போய் விடும்.

வழக்கமாக ஒரு செடியில் 15 முதல் 20 காய்கள் சராசரியாக இருக்க வேண்டும். மழையில் சிக்கும் செடிகளில் 10க்கும் குறைவான காய்களே இருக்கும். இதனால் மகசூல் பாதியாக குறைவதுடன், காய்களும் தரமில்லாமலும் இருக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த வயல்களில் அதிக தண்ணீர் வருவதை தடுக்கவும், மழை நின்ற உடன் உடனடியாக தண்ணீரை வெளியேற்றும் வகையில் வடிகால் வசதியை மேம்படுத்தி, நீர் தேங்காமல் பராமரித்தால் ஓரளவிற்கு பாதிப்பில் இருந்து வேர்கடலை பயிர்களை பாதுகாக்க முடியும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us