/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெல் கொள்முதல் நிலையத்தில் எடை போ டும் பணியில் மெத்தனம் விவசாயிகள் கவலை
/
நெல் கொள்முதல் நிலையத்தில் எடை போ டும் பணியில் மெத்தனம் விவசாயிகள் கவலை
நெல் கொள்முதல் நிலையத்தில் எடை போ டும் பணியில் மெத்தனம் விவசாயிகள் கவலை
நெல் கொள்முதல் நிலையத்தில் எடை போ டும் பணியில் மெத்தனம் விவசாயிகள் கவலை
ADDED : பிப் 06, 2026 05:56 AM

திருவெண்ணெய்நல்லுார்: அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் எடைபோடாமல் நெல்லை தேக்கி வைத்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் கடந்த, 2ம் தேதி துவங்கப்பட்டது.
இங்கு திருவெண்ணெய்நல்லுார், பெரியசெவலை, கொத்தனுார், சரவணம்பாக்கம், மழையம்பட்டு, தடுத்தாட்கொண்டூர், காந்தலவாடி, மடப்பட்டு, மணக்குப்பம் உட்பட சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கிலிருந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ஒரு மாதத்திற்கு முன்னரே நேரடி கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வந்து கொட்டி வைத்துள்ளனர்.
இந்தாண்டு கொள்முதல் நிலையம் காலம் கடந்து திறக்கப்பட்டது ஒருபுறம் இருந்தாலும், திறக்கப்பட்டும் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையில் நெற்பயிர்கள் நனைந்து நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து நீண்ட நாட்களுக்கு நெல்லை கொட்டி வைப்பதால் மேலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. நெல்லை விரைவில் கொள்முதல் செய்து, பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்' என்றனர்.

