ADDED : செப் 20, 2024 09:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 24ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் வரும் 24ம் தேதி காலை 11:00 மணிக்கு கோட்ட அளவில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் தாலுகாக்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.