ADDED : ஏப் 23, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (24ம் தேதி) கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.
சப் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
திண்டிவனம், ஜக்காம்பேட்டையில் சப் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (24 தேதி) காலை 11:00 மணிக்கு, சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனுார் தாலுகா விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.