ADDED : ஆக 07, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 12 ம் தேதி நடக்கிறது.
விழுப்புரம், வட்டாட்சியர் அலுவலகத்தில், இம்மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் வரும், 12ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
இந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்குகிறார். இதில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகா பகுதிகளைச் சேர்ந்த அனைத்து விவசாய பிரதிநிதிகளும் கலந்து கொள்ளலாம்.