/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
/
வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
ADDED : அக் 30, 2025 06:56 AM
விழுப்புரம்: ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் சீனுவாசன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கடந்த 2021---22ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்து கிராம ஊராட்சிகளை தன்னிறைவு அடையச் செய்து ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி அடையச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தின் கீழ் தரிசாக உள்ள நிலத்தில் முட்புதர்களை அகற்றி, சமன்படுத்தி உழவுப்பணிகளை மேற்கொள்ள ெஹக்டருக்கு ரூ.9 ஆயிரத்து 600 மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், வரப்புப்பயிராக பச்சைப்பயறு, உளுந்து போன்ற பயிர்களை சாகுபடி செய்ய ெஹக்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது. அத்துடன், நன்மை பயக்கும் நுண்ணுயிர்களைப் பெருக்கி மண்வளத்தை மேம்படுத்துவதற்கு, திரவ உயிர் உரங்கள் மற்றும் தொழு உரம் ஆகியவற்றை பயன்படுத்தி செயல்விளக்கத் திடல்கள் அமைத்திட ெஹக்டருக்கு ரூ.450 மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் ஒரு விவசாயி அதிகபட்சமாக 2 ெஹக்டர் வரை பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் விசைத்தெளிப்பான்களும் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உழவர் செயலியில் பதிவு செய்தும், வேளா ண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டும், இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடையலாம்.
1.60 லட்சம் பேர் பயன் கடந்த 4 ஆண்டுகளில், விழுப்புரம் மாவட்டத்தில் 557 கிராம ஊராட்சிகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 754 விவசாயிகள் பயன்பெற்றுள்ள னர். நடப்பு நிதியாண்டில், விழுப் புரம் மாவட்டத்தில் 131 கிராம ஊராட்சிகளில், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மைத் துறை மூலம், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்தார்.
1.60 லட்சம் பேர் பயன்
கடந்த 4 ஆண்டுகளில், விழுப்புரம் மாவட்டத்தில் 557 கிராம ஊராட்சிகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 754 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். நடப்பு நிதியாண்டில், விழுப்புரம் மாவட்டத்தில் 131 கிராம ஊராட்சிகளில், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மைத் துறை மூலம், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்தார்.

