sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

/

விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்


ADDED : ஜூன் 09, 2025 11:25 PM

Google News

ADDED : ஜூன் 09, 2025 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முற்றுகை போராட்டத்திற்கு, மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முருகன், கணேசன், கருப்பையா உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அப்போது அங்கிருந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியதாவது;

விழுப்புரம் மாவட்டத்தில் துார்வாரப்படாத ஏரி, குளங்களையும், மணிமுத்தாறு, கெடிலம் ஆறு, பெண்ணையாறுகளிலிருந்து வரும் பாசன வாய்க்கால்களையும் துார்வாரி புனரமைக்க வேண்டும். அணை கட்டுகளின் மதகுகள் மறுசீரமைக்க வேண்டும். நந்தன் கால்வாய் திட்டத்திற்கு அரசு அறிவித்தபடி ரூ.304 கோடி நிதியில், திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். கரும்பு டன்னிற்கு ரூ. 4 ஆயிரமும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500ம் வழங்க வேண்டும்.

இயந்திர நடவுக்கு ஹெக்டேருக்கு ரூ. 4 ஆயிரம் வழங்குவதுபோல், கையிற்றால் பிடித்து நடவு செய்யும் நெல் சாகுபடிக்கும், நடவு மானியம் அரசு வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் கரும்பு ஆலை வழி நெடுஞ்சலைகளை அகலப்படுத்த வேண்டும், மக்காச்சோளத்தையும் அரசே கொள்முதல் செய்யவேண்டும், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3,500 விலை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.






      Dinamalar
      Follow us