ADDED : பிப் 17, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி, : செஞ்சியில் மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் மாதவன் தலைமை தாங்கினார்.
கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் குண்டு ரெட்டியார் முன்னிலை வகித்தார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் கண்டன உரையாற்றினார். வட்டக் குழு நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
டில்லியில், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்துவதை கண்டித்து பேசினர்.