ADDED : ஜன 19, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்- வளத்தி அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
வளத்தி அடுத்த செவலப்புரை கிராமத்தைச் சேர்ந்தவர் சேத்தான் மகள் ராபியா, 19; இவர் பிளஸ் 2 வரை பயின்று விட்டு வீட்டிலிருந்தார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சேத்தான் அளித்த புகாரின் பேரில், வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.