ADDED : ஜூலை 06, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த காணை பகுதியைச் சேர்ந்தவர் அசோக், 40; இவரது மனைவி அருள்மொழி, 35; இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த மாதம் 25ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அருள்மொழி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது தந்தை விட்டல்நாதன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.