/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி
/
போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி
போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி
போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி
ADDED : மார் 15, 2025 08:31 PM
விழுப்புரம்; விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அனைத்து தொழிற் சங்கங்களின் ஒத்துழைப்புடன், தொழிலாளர்களிடமிருந்தும் பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இந்த பணத்தை விழுப்புரம் மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் பணிபுரிந்து அண்மையில் இறந்த தொழிலாளர்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதியுதவியாக வழங்கப்பட்டது.
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மேலாண் இயக்குநர் குணசேகரன், பொது மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், ஊழியர்களின் குடும்பத்தினருக்கு காசோலையாக வழங்கினர்.