/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கலைக்கல்லுாரியில் தீயணைப்பு விழிப்புணர்வு
/
அரசு கலைக்கல்லுாரியில் தீயணைப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 07, 2025 02:15 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருவார பயிற்சி திட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் அசோகன் தலைமை தாங்கினார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ராஜசேகர், சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு  உரையாற்றினார். சப் இன்ஸ்பெக்டர்கள் தவமணி, விஸ்வநாதன் வாழ்த்தி பேசினர்.
அன்னியூர் தீயணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர்,  நடைமுறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். பேராசிரியர்கள் பாபு, சுவாமிநாதன், சுமதி, ரங்கநாதன், மணவாளன், சின்னதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

