/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பார்சல் கண்டெய்னர் லாரியில் தீ ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்
/
பார்சல் கண்டெய்னர் லாரியில் தீ ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்
பார்சல் கண்டெய்னர் லாரியில் தீ ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்
பார்சல் கண்டெய்னர் லாரியில் தீ ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்
ADDED : செப் 29, 2024 05:59 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பார்சல்கள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
மதுரையிலிருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு பார்சல்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி புறப்பட்டது. லாரியை மதுரை, களிமங்கலத்தை சேர்ந்த அயூப்கான்,61; ஓட்டினார்.
நேற்று அதிகாலை 5:00 மணியளவில் விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி, வராக நதி ஆற்றுப்பாலத்தில் சென்றபோது லாரியினுள் இருந்து திடீரென புகை வந்ததால், அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தினார்.
கண்டெய்னரை திறந்து பார்த்த போது லாரியினுள் இருந்த பார்சல்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் லாரியினுள் இருந்த உணவு பொருட்கள், துணி, இரு சக்கர வாகனம், எலக்ட்ரானிக் பொருட்கள், ஆட்டோமொபைல் பொருட்கள் என 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்ததில், பார்சல் பைக்கிலிருந்த பெட்ரோல் கசிவால் தீப்பற்றி எரிந்தது தெரிய வந்தது.