ADDED : ஏப் 25, 2025 05:07 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நகராட்சி உயர்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான குழுவினர், செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். தொடர்ந்து, விழுப்புரம் பழைய பஸ் நிலையம், சிக்னல் சந்திப்பு ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்வும், விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் பொதுமக்களுக்கு வழங்கினர்.
