/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விறகு கடையில் திருட்டு: போலீஸ் விசாரணை
/
விறகு கடையில் திருட்டு: போலீஸ் விசாரணை
ADDED : நவ 18, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டியில் விறகு கடை பூட்டை உடைத்து பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி நடுசெட்டி தெருவைச் சேர்ந்தவர் பிச்சை மொய்தீன், 74; விறகு கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை கடை திறக்கச் சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கல்லா பெட்டியில் இருந்த 17 ஆயிரத்து 800 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.