/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாலீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா
/
வாலீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா
ADDED : ஜன 23, 2025 05:48 AM

விழுப்புரம்: கோலியனூர் வாலீஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
விழுப்புரம் அடுத்த கோலியனூரில் உள்ள வாலீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழா வழிபாடு நேற்று நடந்தது. காலை 10.30 மணிக்கு சுவாமிக்கு மஹா ருத்ர ஹோமம் கலசா அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மூலவர் வாலீஸ்வரருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் வாலீஸ்வரருக்கும், தாயாருக்கும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இரவு 7.00 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து உற்சவர் வாலீஸ்வரரும், தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் இரவு திருவீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

