sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தேசிய நெடுஞ்சாலையில் கொடி கம்பங்கள் அகற்றம்

/

தேசிய நெடுஞ்சாலையில் கொடி கம்பங்கள் அகற்றம்

தேசிய நெடுஞ்சாலையில் கொடி கம்பங்கள் அகற்றம்

தேசிய நெடுஞ்சாலையில் கொடி கம்பங்கள் அகற்றம்


ADDED : மே 31, 2025 11:55 PM

Google News

ADDED : மே 31, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த கொடி கம்பங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பல்வேறு அரசியல் கட்சியினர், ஜாதி சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர் என புற்றீச்சல்கள் போல் கொடி கம்பங்கள் வைத்திருந்தன.

இந்த கொடி கம்பங்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், சாலைகளை மறித்து அமைக்கப்பட்டு இருப்பதாகவும் புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, கடந்த ஜனவரி மாதம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கொடி கம்பங்கள் 12 வாரங்களுக்குள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து, நேற்று திண்டிவனம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பங்களை அகற்றினர்.

குறிப்பாக ஆரியாஸ் ஓட்டல் அருகில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து கொடி கம்பங்களும் அகற்றப்பட்டுள்ளன. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், சிமென்ட் பீடங்களை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர்.






      Dinamalar
      Follow us