/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமங்கலம் ஊராட்சியில் வெள்ள நிவாரணம் வழங்கல்
/
கண்டமங்கலம் ஊராட்சியில் வெள்ள நிவாரணம் வழங்கல்
ADDED : டிச 09, 2024 06:17 AM

கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஊராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் பிரியதர்ஷினி முருகன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., மணிவண்ணன், ஊராட்சி துணைத் தலைவர் பத்மாவதி சுந்தரமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அய்யனார் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய சேர்மன் வாசன் அரசின் நிவாரணமாக தொகை ரூ.2000 ரூபாய் மற்றும் பொருட்களை வழங்கினார்.
மருத்துவ அணி துணை அமைப்பாளர் செந்தில், தி.மு.க., கிளை செயலாளர்கள் இளங்கோவன் திருநாவுக்கரசு, ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், அமிர்தராஜ், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கவி உட்பட பலர் பங்கேற்றனர்.