ADDED : அக் 12, 2025 05:02 AM

திண்டிவனம் : நெல்மண்டி கண்ணன் நினைவு அஞ்சலியை முன்னிட்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டிவனம், கால பைரவர் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் யாதவகுமாரின் தந்தை நெல்மண்டி கண்ணனின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு, மேம்பாலத்தின் கீழ், தாலுகா அலுவலகம் எதிரில், செஞ்சிரோடு அம்மா உணவகம் ஆகிய இடங்களில், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
நகர்மன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமை தாங்கினார். யாதவகுமார், கண்ணன் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர், கவுன்சிலர் சுதாகர், முன்னாள் கவுன்சிலர் திருப்பதியார்சங்கர், சரவணன், பழனி, பாரதிதாசன், வழக்கறிஞர் ராகுல், சிவா, பன்னீர், எலக்ட்ரீஷியன் சங்கர், மின்துறை பிரபுதாஸ், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.