sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கனமழையால் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு

/

 கனமழையால் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு

 கனமழையால் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு

 கனமழையால் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு


ADDED : டிச 01, 2025 05:16 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் டிட்வா புயல் கனமழையையொட்டி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் டிட்வா புயல் கனமழையால், மரக்காணம் ஒன்றியம், அனுமந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாமில் 54 பேரும், செஞ்சி ஒன்றியம், அஞ்சாஞ்சேரி ஊராட்சி சமுதாய கூடத்தில் 40 பேரும், சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 20 பேரும், மயிலம் ஒன்றியம், பாதிராபுலியூர் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் 56 பேரும், வீடூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 38 பேர் உட்பட 5 முகாம்களிலும் 208 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நேற்று கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில் காலை உணவு வழங்கப்பட்டது. மேலும், மரக்காணம் ஒன்றியத்தில் தாழ்வான பகுதியில் வசிக்கும் 1,365 பேருக்கு வீடுகளுக்கே நேரில் சென்று உணவு வழங்கப்பட்டது.

மரக்காணம் ஒன்றியம் அனுமந்தை, கூனிமேடுகுப்பம், மயிலம் ஒன்றியம் பாதிராபுலியூர், வீடூர், வானுார் ஒன்றியம் ஆண்பாக்கம், பொம்மையார்பாளையம், செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலம், அஞ்சாஞ்சேரி ஆகிய 8 ஊராட்சிகளில் மருத்துவ முகாம்கள் நடந்தது.






      Dinamalar
      Follow us