sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மர்ம விலங்கை கண்டுபிடிக்க தானியங்கி கேமரா பொருத்தம் வனத்துறை ஏற்பாடு

/

மர்ம விலங்கை கண்டுபிடிக்க தானியங்கி கேமரா பொருத்தம் வனத்துறை ஏற்பாடு

மர்ம விலங்கை கண்டுபிடிக்க தானியங்கி கேமரா பொருத்தம் வனத்துறை ஏற்பாடு

மர்ம விலங்கை கண்டுபிடிக்க தானியங்கி கேமரா பொருத்தம் வனத்துறை ஏற்பாடு


ADDED : ஜூன் 30, 2025 03:04 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: மர்ம விலங்கு தாக்கி கால்நடைகள் இறந்த கொங்கரப்பட்டு கிராமத்தில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தில் 27 ம் தேதி இரவு மர்ம விலங்கு தாக்கியதில் 3 வெள்ளாடுகளும், ஒரு கன்று குட்டியும் இறந்தன. இரண்டு கன்றுகுட்டிகள் உயிருக்கு போராடி வருகின்றன.

இந்த கிராமத்தில் செஞ்சி வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். வனவிலங்கு கடித்த பல் தடம் மற்றும் கால் தடத்தை கொண்டு கால்நடைகளை தாக்கியது நாய்கள் இல்லை என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து எந்த வகை விலங்கு என்பதை கண்டறிய கொங்கரப்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.

நேற்று காலை இதில் எந்த விலங்கும் பதிவாக வில்லை. வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மர்ம விலங்கு நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us