/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரங்கபூபதி இன்டர்நேஷனல் பள்ளியில் வனத்திருவிழா
/
ரங்கபூபதி இன்டர்நேஷனல் பள்ளியில் வனத்திருவிழா
ADDED : ஜூலை 08, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி., இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் ஸ்ரீரங்க பூபதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் வனத் திருவிழா நடந்தது.
தாளாளர் ரங்கபூபதி தலைமை  தாங்கி மரக்கன்று நட்டு விழாவை துவக்கி வைத்து பேசினார். செஞ்சி வனத்துறை வனவர் பாலசுந்தரம், வனக்காப்பாளர் பச்சையப்பன் முன்னிலை வகித்தனர்.  சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ராபியா வரவேற்றார். மெட்ரிக் பள்ளி முதல்வர் தனலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
விழாவில், மரம் வளர்ப்பதன் நன்மைகள்,  மரங்களை அழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடந்தது.

