/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அவதுாறு வழக்குகளில் இருந்து 'மாஜி' அமைச்சர் விடுவிப்பு
/
அவதுாறு வழக்குகளில் இருந்து 'மாஜி' அமைச்சர் விடுவிப்பு
அவதுாறு வழக்குகளில் இருந்து 'மாஜி' அமைச்சர் விடுவிப்பு
அவதுாறு வழக்குகளில் இருந்து 'மாஜி' அமைச்சர் விடுவிப்பு
ADDED : டிச 06, 2024 06:32 AM
விழுப்புரம் : விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்த 2 அவதுாறு வழக்குகளில் இருந்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதே ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டங்களி்ல அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அவதுாறாக பேசியதாக அவர் மீதும், சக்கரபாணி எம்.எல்.ஏ., மீதும் விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த 2 வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வந்தது. சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆஜரானார். சண்முகம் ஆஜராகவில்லை. அவரது சார்பில் அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆஜராகி சண்முகம் மீதான 2 வழக்குகளையும் ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதாக கூறி அதன் நகலை சமர்பித்தனர்.
இதை ஏற்ற நீதிபதி ராதிகா, 2 வழக்குகளில் இருந்தும் சண்முகத்தை விடுவித்து உத்தரவிட்டதோடு, சக்கரபாணி எம்.எல்.ஏ., மீதான அவதுாறு வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.
இதற்கு அவரையும் இவ்வழக்கில் இருந்து விடுவிக்க கோரி வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தனர்.
இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை வரும் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.