sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு; மாஜி அமைச்சர் சண்முகம் குற்றச்சாட்டு

/

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு; மாஜி அமைச்சர் சண்முகம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு; மாஜி அமைச்சர் சண்முகம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு; மாஜி அமைச்சர் சண்முகம் குற்றச்சாட்டு


ADDED : டிச 31, 2024 04:49 AM

Google News

ADDED : டிச 31, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,: ''தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றங்கள் தொடர் கதையாகி விட்டது'' என அ.தி.மு.க.,. முன்னாள் அமைச்சர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க., அரசை கண்டித்து நேற்று காலை விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்த முயன்ற அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகத்தை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நிருபர்களிடம் சண்முகம் கூறியதாவது:

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து வந்த பாலியல் குற்றங்கள், தற்போது தொடர் கதையாகி இருக்கிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் கல்லுாரி மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இந்த குற்றத்தை செய்த நபரை காப்பாற்ற தி.மு.க. அரசு துடிக்கிறது. அ.தி.மு.க. நடத்தும் போராட்டத்தை ஏன் தி.மு.க. அரசு முடக்கப்பார்க்கிறது?

கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பவர்களை பிடிக்க போலீசார் இல்லை. ஆனால் ஜனநாயக முறையில் போராடுகிற எங்களை கைது செய்வதற்கு மட்டும் போலீசார் வருகின்றனர்.

காவல்துறையை நிர்வகிக்கும் முதல்வருக்கு இது அழகா? இவ்வாறு சண்முகம் கூறினார்.






      Dinamalar
      Follow us