sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புதைக்கப்பட்ட குண்டு வெடித்து நான்கு பெண்கள் படுகாயம்

/

புதைக்கப்பட்ட குண்டு வெடித்து நான்கு பெண்கள் படுகாயம்

புதைக்கப்பட்ட குண்டு வெடித்து நான்கு பெண்கள் படுகாயம்

புதைக்கப்பட்ட குண்டு வெடித்து நான்கு பெண்கள் படுகாயம்


ADDED : நவ 09, 2024 11:03 PM

Google News

ADDED : நவ 09, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்:விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடையார் கிராமத்தில், அரசு பள்ளி பின்புறமுள்ள விவசாய வாய்க்காலில், 100 நாள் பணியாளர்கள் நேற்று வேலை செய்தனர்.

இதில், தொட்டிக்குடிசை கிராமத்தை சேர்ந்த பெண்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர். பகல், 1:00க்கு, லட்சுமணன் மனைவி தேவகி, 53, மண் வெட்டியால் மண்ணை கொத்தியபோது, பலத்த சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்தது சிதறியது.

அதில், தேவகி, சுந்தரி, 45, தனம், 50, கலைவாணி, 40, ஆகியோருக்கு கால், கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. திருவெண்ணெய்நல்லுார் போலீசார், காயமடைந்த நான்கு பேரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

வெடிகுண்டு சோதனை மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார், தடவியல் நுண்ணறிவு பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்தனர்.

போலீசார் கூறுகையில், 'காட்டு பன்றி தொல்லையை கட்டுப்படுத்துவற்காக நாட்டு வெடிகுண்டு புதைத்து வைத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us