ADDED : ஜன 15, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விராட்டிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிபிரபா வரவேற்றார்.
விராட்டிக்குப்பம் ஊராட்சி தலைவர் அன்னலட்சுமி ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக் சதாசிவம், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் தனுசு ஆகியோர், மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர். 80 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.
உதவி தலைமை ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.