
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : தென்கொளப்பாக்கம் கிராமத்தில் செங்கழுநீர் அம்மன் கோவிலில் பவுர்ணமி உற்சவம் நடந்தது.
இதையொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மேற்கொண்டனர்.

