sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

/

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்


ADDED : ஆக 21, 2025 09:14 PM

Google News

ADDED : ஆக 21, 2025 09:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; திண்டிவனத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சப் கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். தாசில்தார் யுவராஜ், திண்டிவனம், செஞ்சி கோட்ட டி.எஸ்.பி.,க்கள், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனுார் தாசில்தார்கள், திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் மின்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், விநாயகர் சிலை அமைப்பு குழுவினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விநாயகர் சிலை நிறுவ உள்ள இடத்திற்கும், தீயணைப்பு நிலையத்திடமும் தடையில்லா சான்று பெற வேண்டும். விநாயகர் சிலை களிமண்ணால் செய்திருக்க வேண்டும்.

சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. சிலை வைத்த இடங்களில் காலை 2:00 மணி நேரமும், மாலை 2:00 மணி நேரம் மட்டுமே ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டும்.

சிலை வைத்த நாளிலிருந்து 5 நாட்களுக்குள் சிலைகளை கடலில் கரைத்துவிட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us