/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூச்சு திணறலால் பெண் குழந்தை சாவு
/
மூச்சு திணறலால் பெண் குழந்தை சாவு
ADDED : நவ 06, 2024 05:43 AM
வானுார் : வானுார் அருகே பிறந்து 45 நாட்களே ஆன பெண் குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது.
வானுார் அடுத்த நல்லாவூரைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி உமாமகேஸ்வரி. இவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதனால் உமாமகேஸ்வரி, வானுாரில் தனது தாய் வீட்டில் இருந்தார்.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, உமாமகேஸ்வரி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் குழந்தையை துாங்க வைத்துள்ளனர்.
குழந்தை மயக்க நிலையில் இருந்ததால் சந்தேகமடைந்தவர்கள் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை துாக்கிச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.