/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.33.20 லட்சத்தில் கட்டிய அரசு கட்டடங்கள் திறப்பு
/
ரூ.33.20 லட்சத்தில் கட்டிய அரசு கட்டடங்கள் திறப்பு
ரூ.33.20 லட்சத்தில் கட்டிய அரசு கட்டடங்கள் திறப்பு
ரூ.33.20 லட்சத்தில் கட்டிய அரசு கட்டடங்கள் திறப்பு
ADDED : டிச 19, 2025 05:56 AM

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் ரூ.33.20 லட்சத்தில் புதிதாக கட்டிய அரசு கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்டு பாண்டியன் நகரில் விழுப்புரம் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.9.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டிய புதிய ரேஷன்கடை கட்டடம், ரூ.12 லட்சத்தில் கருமகாரிய கொட்டகை, வி.மருதுார் பகுதியில் புதிதாக ரு.12 லட்சத்தில் கட்டிய கருமகாரிய கொட்டகை என மொத்தம் ரூ.33.20 லட்சத்தில் கட்டிய புதிய கட்டடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது.
இந்த கட்டடங்களை லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர்மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு, நகர செயலாளர் சக்கரை, நகராட்சி ஆணையர் வசந்தி, பொறியாளர் புவனேஸ்வரி, நகர துணை செயலாளர் புருஷோத்தமன், வி.சி., மாவட்ட செயலாளர் பெரியார், கவுன்சிலர்கள் கலை, சாந்தராஜ், புல்லட்மணி, மணவாளன், வார்டு செயலாளர்கள் தாமரைமணவாளன், பிரபாகரன், தொண்டரணி அமைப்பாளர் கபாலி, விளையாட்டு மேம்பாட்டு அணி மகேஷ், இலக்கிய அணி கிருஷ்ணமூர்த்தி, சுற்றுச்சூழல் அணி ராம், நகர ஆதிதிராவிடர் அணி பிரகதீஸ்வரன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்த், மாணவரணி சூர்யா, பிரவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

