ADDED : பிப் 16, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த ஆலாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி ,84; இவர், கடந்த 13 ம் தேதி சைக்கிளில், தனது கிராமத்திலிருந்து, விழுப்புரம் -திருச்சி நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மண்ணாங்கட்டி இறந்தார். விபத்து குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

