sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுதானிய சாகுபடிக்கு அரசு மானியம் 

/

சிறுதானிய சாகுபடிக்கு அரசு மானியம் 

சிறுதானிய சாகுபடிக்கு அரசு மானியம் 

சிறுதானிய சாகுபடிக்கு அரசு மானியம் 


ADDED : ஜூலை 31, 2025 11:10 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி; காணை வட்டாரத்திலுள்ள விவசாயிகள் சிறு தானிய சாகுபடி செய்தால் அரசு மானியம் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திக்குறிப்பு:

காணை வட்டாரத்தில் ஆண்டுதோறும் 3200 ெஹக்டர் பரப்பளவில் கம்பு, தினை, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

வேளாண்மை துறை மூலம் காணை வட்டாரத்தினை சிறு தானிய மண்டலமாக தேர்வு செய்து, தமிழ்நாடு சிறு தானிய இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் இந்தாண்டிற்கு ரூ.9.24 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் தினை, கேழ்வரகு, சாமை ,வரகு உள்ளிட்ட குறு தானியங்கள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1600 பின்னேற்பு மானியமும் , மாற்றுப்பயிர் திட்டத்தில் இடுபொருட்கள் மற்றும் அறுவடை கூலிக்காக ரூ.1250 மானியமும் வழங்கப்படுகிறது. சிறு தானிய விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் உழவர் செயலி மூலம் முன்பதிவு செய்து வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us