sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் தவிப்பு: 11 ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் இல்லை

/

அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் தவிப்பு: 11 ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் இல்லை

அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் தவிப்பு: 11 ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் இல்லை

அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் தவிப்பு: 11 ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் இல்லை


ADDED : பிப் 19, 2024 05:33 AM

Google News

ADDED : பிப் 19, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பல்நோக்கு அரசு மருத்துவமனை பணியாளர்கள், அரசாணைப்படி பணி நிரந்தரம் செய்யாமல், தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரிகளில், சுகாதாரத் துறையால் நியமிக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (மல்டி பர்பஸ் ஆஸ்பிடல் ஒர்க்கர்ஸ்) பலர் பணியாற்றி வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் காலியிடங்களாக உள்ள துப்புரவு பணியாளர், மருத்துவப் பணியாளர், செவிலிய உதவியாளர் ஆகிய பணியிடங்களை, பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் என பெயர் மாற்றம் செய்து, கடந்த 2013ல் ஆணை பிறப்பித்து, நியமிக்கப்பட்டனர்.

இந்த பணியிடங்கள் தினக்கூலி அடிப்படையில், மாவட்ட வேலை வாய்ப்பு அலவலகம் மூலம், தகுதிப் பட்டியல் பெற்று நேர்முக தேர்வு நடத்தி நியமித்தனர். இந்நிலையில், 11 ஆண்டுகளாகியும், அரசாணைப்படி பணி நிரந்தரம் செய்யாமல், தினக்கூலியாகவே வேலை பார்ப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, விழுப்புரம் அரசு மருத்துவமனை பல்நோக்கு ஊழியர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 565 பேர், மல்டி பர்பஸ் ஒர்க்கர் பணிக்கு நியமிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 65 பேர் உள்ளனர். அரசு மருத்துவமனை வார்டுகளில் சுவர், ஜன்னல், தரை, கழிவறைகள், மருத்துவமனை சுற்றுப்புறங்களில் துாய்மைப் பணி செய்தல்.

நடக்க முடியாத நோயாளிகளுக்கு சிறுநீர்க் குடுவை, மலம் கழிக்கும் வட்டு போன்றவற்றை பயன்படுத்தி துாய்மைப் பணி செய்தல், அறுவை சிகிச்சைக்கு நோயாளிகளை தயார் செய்தல்.

பரிசோதனைக்கு பயன்படுத்திய உபகரணங்களை சுத்தம் செய்தல், ஸ்டெச்சர் படுக்கைகளை எடுத்துச் செல்லுதல், இறந்தவர்களின் உடலை பிணவறைக்கு எடுத்துச் செல்லுதல். பிண கூராய்வுக்கு உதவி செய்தல், அறுவை சிகிச்சைக்குப் பின் எடுக்கப்படும் உடல் உறுப்புகளை தொற்று ஏற்படாதவாறு அப்புறப்படுத்துதல், இரவு காவலர்கள் உள்ளிட்ட 'ஏ - டூ - இசட்' பணிகளை, மேற்கொண்டு வருகிறோம்.

காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும், இரவு 7:00 முதல் காலை 7:00 மணி வரை என ஷிப்ட் முறையில் வேலை பார்க்கிறோம். தினக்கூலி அடிப்படையில், தொடக்கத்தில் 150 ரூபாய்க்கு வேலை வழங்கினர், மாதம் 4,450 ரூபாய் அளவில் ஊதியம் கிடை த்தது.

தற்போது மாதம் 20 ஆயிரம் ரூபாய் வழங்குகின்றனர். வேலை வாய்ப்பு பதிவு மூப்பு எடுத்து, விதவை, மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கினர்.

தினக்கூலி அடிப்படையில் 5 ஆண்டுகள் பணி முடிந்தவுடன், காலமுறை ஊதிய விகிதத்தில் பணியமர்த்தப்படுவர் எனவும் அரசாணையில் குறிப்பிட்டு பணி ஆணை வழங்கினர்.

ஆனால், 11 ஆண்டுகளாகியும், பணிநிரந்தரம் செய்யாமல் தினக்கூலியாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

முதல்வர், அமைச்சர்கள், சுகாதாரத்துறை இயக்குனர் என பலரிடம், பல ஆண்டுகள் கோரிக்கை வைத்தும், போராடியும் நடவடிக்கை இல்லை. தி.மு.க., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்படும் என வாக்குறுதியளித்தனர்.

எங்களுக்கான கோப்பு தயாராகி, நிதித்துறை ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், நீண்டகாலமாக குறிப்பிட்டு வருகின்றனர். தற்போது 390 பேர்தான் பணியில் இருக்கின்றோம்.

இடையே ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம், முறையின்றி பலரை பணிக்கு எடுத்ததால், அவர்களையும், இத்திட்டத்தில் நிரந்தரம் செய்ய வேண்டியிருக்கும் என, அரசு தரப்பில் தயங்குவதாக கூறுகின்றனர். முதல்வர் எங்கள் நிலை குறித்து அறிந்து, பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us