நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : பட்டதாரி பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த வி.புதுாரை சேர்ந்தவர் செங்கதிர்செல்வன் மகள் கீர்த்தனா, 22; எம்.எஸ்.சி., படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டிலிருந்து விழுப்புரம் சென்ற அவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.