ADDED : பிப் 17, 2026 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை ஊர்வலம் நடந்தது.
அதனையொட்டி நேற்று முன்தினம் பக்தர்களுக்கு காப்பு அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று மதியம் மயானத்தில் மகிஷாசூரன் வதம் நடந்தது.
இதில் காளி வேடமிட்ட பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். இரவு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. கண்டாச்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.

