/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்பு முகாம் 427 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்பு முகாம் 427 மனுக்கள் குவிந்தன
ADDED : பிப் 13, 2024 05:29 AM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், 427 மனுக்கள் பெறப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். மனுக்கள் மீது உடனடி கவனம் செலுத்தி குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, ஆதவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உட்பட பல கோரிக்கைகள் தொடர்பாக 427 மனுக்கள் பெறப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.