/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்பு கூட்டம்: 454 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்பு கூட்டம்: 454 மனுக்கள் குவிந்தன
ADDED : ஆக 26, 2025 06:53 AM
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நடந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுதாரர்கள் முன்னிலையில் விசாரித்து, தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாறுதல் என பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்து 454 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜி, சப் கலெக்டர் முகுந்தன், பிற்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், ஆதி திராவிடர் நல அலுவலர் வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற் றனர்.