/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்புக் கூட்டம்; 508 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்புக் கூட்டம்; 508 மனுக்கள் குவிந்தன
ADDED : ஆக 19, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 508 மனுக்கள் பெறப்பட்டது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., ஹரிதாஸ், பல்வேறு துறை சார்ந்த 508 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் சப் கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஸ்வரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முகுந்தன், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.